Wednesday, June 15, 2011

அட 
ஆரியன் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் 
சூரியனே இனி 
நாறிய உன் பிழைப்பை 
ஊரறிய  சொல்லுவோம்.....


தமிழர்கள் 
புல்டோசரிலே நசுக்கப்பட்ட போதும் 
தீயிலே பொசுக்கப்பட்ட போதும் 
சிங்களவன் கை கொட்டி ரசித்தான் 
எங்களவன்  நீயோ கை கட்டி நின்றாய்.


கவுண்டர்களை வைத்து நீ ஒரு கணக்கு போட்டாய்...
அதுவே உனக்கு கவுன்ட்-டவுன் ஆகிவிட்டது....

கோபுரங்கள் சாய்வதில்லை 
கோபாலபுரம்  ஓய்வதில்லை
சொத்து குவிப்பதே 
முத்துவேலப்பர் மகன் தொழில் என்றாய் ...

அன்று
ஹனுமான் வைத்த தீ மட்டுமல்ல 
நீ காத்த மவுன தீயும் இலங்கையை எரித்தது
இன்று 
ராசா வைத்த தீ 
ராசாத்தி மகளையும் எரிக்கிறதே 
அய்யகோ......




சென்ற ஜூனில் செம்மொழி கண்டாய் கோவையில்...
இந்த    ஜூனில்  கனிமொழியை கண்டாய் திகரில்.....
அடுத்த ஜூனில் உன்னை நாங்கள் காண்போமா மண்ணில்..




Tuesday, June 14, 2011

USEFUL HANDI CRAFTS WITH USELESS BLADES..

27 பயன் படுத்தப்பட்ட பிளேடுகளை எடுத்துக்கொள்ளவும். ஒரு பிளேடின் மத்தியில் உள்ள  இடைவெளியில் இரண்டாவது  பிளேடின் வாய் பகுதியை நுழைத்துக்கொள்ளவும். இது போலவே இரண்டாவது பிளேடின் மத்தியில் மூன்றாவது பிளேடின் வாய் பகுதியை நுழைத்துக்கொள்ளவும். இப்படியே 27 பிளேடுகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கவும்.  27 பிளேடும் இணைக்கப்பட்டு நீளமாக இருக்கும். இப்போது நீளமாக  உள்ள பிளேடுகளை  கீழ்பக்கம் நெருக்கமாக நகர்த்தவும் பின் முதல் பிளேடையும் 27 -வது பிளேடயும் வளைத்து வட்ட வடிவமாக  இணைக்கவும். இப்போது அழகிய விளக்கு வட்டம் தயார். 

Saturday, November 27, 2010

மரக்கரி விற்பது போல்
மாறத் தமிழன்
கறி விற்றது
மறக்க முடியுமா
கொழும்பு நகர வீதியிலே..

மலையக மக்கள்
எங்கள் மறு பெயரோ
வந்தேறிகள்
சில சமயம்
சிங்கள அடுப்பில்
தந்தூரிகள்..

கொடுமைகளை கண்ட
எங்கள் உள்ளமோ கசப்பில்
கொதிதெளுந்து கேட்டாள்
எங்கள் உடல்கள்
கசாப்பில்...

இன்று முகாம்களிலே
வதை படுகிறோம்
சிதை படுகிறோம்
எங்கள் விதைகள் வீதியிலும்
சதைகள் சாக்கடையிலும்
வீசி எறியப்படுகின்றன.....

வெளியே பயிரை
மேயுமோர் ஆட்சி...
அந்த வேலிக்கு இந்த
ஓனான் சாட்சி...
ஈழத்தில் தான் இந்த காட்சி..

சரித்திரங்கள் பல கண்ட
தமிழர்கள் இன்று
தரித்திரங்களாக முகாம்களில்....

உலகிற்க்கு
சூத்திரங்கள் பல தந்தவர்கள்
கையில் பாத்திரங்களோடும்
நெஞ்சில் ஆத்திரங்களோடும்
விடியலுக்காய்
காத்திருக்கிறோம் பகலிலே...

Saturday, November 13, 2010

தினமலர் நாளிதழில் வெளியான செய்தி...