அட
ஆரியன் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும்
சூரியனே இனி
நாறிய உன் பிழைப்பை
ஊரறிய சொல்லுவோம்.....
தமிழர்கள்
புல்டோசரிலே நசுக்கப்பட்ட போதும்
தீயிலே பொசுக்கப்பட்ட போதும்
சிங்களவன் கை கொட்டி ரசித்தான்
எங்களவன் நீயோ கை கட்டி நின்றாய்.
கவுண்டர்களை வைத்து நீ ஒரு கணக்கு போட்டாய்...
அதுவே உனக்கு கவுன்ட்-டவுன் ஆகிவிட்டது....
கோபுரங்கள் சாய்வதில்லை
கோபாலபுரம் ஓய்வதில்லை
சொத்து குவிப்பதே
முத்துவேலப்பர் மகன் தொழில் என்றாய் ...
அன்று
ஹனுமான் வைத்த தீ மட்டுமல்ல
நீ காத்த மவுன தீயும் இலங்கையை எரித்தது
இன்று
ராசா வைத்த தீ
ராசாத்தி மகளையும் எரிக்கிறதே
அய்யகோ......
சென்ற ஜூனில் செம்மொழி கண்டாய் கோவையில்...
இந்த ஜூனில் கனிமொழியை கண்டாய் திகரில்.....
அடுத்த ஜூனில் உன்னை நாங்கள் காண்போமா மண்ணில்..